கைத்தொலைபேசியில் ஆபாசப்படம் பார்த்த 52 வயதுடைய நபருக்கு கிடைத்த பரிசு..!

கைத்தொலைபேசியில் ஆபாசப்படம் பார்த்தவருக்கு 2 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதித்த நீதவான் 50 மணித்தியாலங்கள் சமூதாய சீர்திருத்தப் பணியில் ஈடுபடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

பருத்தித்துறையை சேர்ந்த 52 வயதுடைய நபரொருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீதியில் நின்று கைத்தொலைபேசியில் ஆபாசப்பட காணொளிகளை பார்வையிட்ட வண்ணம் இருந்துள்ளார்.

அவ்வேளை குறித்த வீதியின் ஊடக ரோந்து கடமையில் ஈடுபட்ட பொலிசார் அதனை அவதானித்தவுடன் குறித்த நபரிடம் இருந்து கைத்தொலைபேசியை கைப்பற்றியதுடன் , குறித்த நபரையும் கைது செய்தனர்.

கைது செய்த நபரை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் பொ.சிவகுமார் முன்னிலையில் முற்படுத்திய போது குறித்த நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து அவருக்கு , 2 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதித்த நீதிவான் 50 மணித்தியாலங்கள் சமூதாய சீர்திருத்தப் பணியில் ஈடுபடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -