எப்.முபாரக்-
திருகோணமலை சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி காட்டு மரங்களை வெட்டிய ஒருவரை அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் எச்.ஜி.தம்மிக்க நேற்று செவ்வாய்கிழமை (26) உத்தரவிட்டார். கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் சூரியபுர காட்டுக்குள் சென்று பச்சை மரங்களை வெட்டிக்கொண்டிருந்த போது பொலிஸாருக்கு காட்டுப் பகுதியில் மரம் வெட்டுவதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொண்ட போது திங்கட்கிழமை (25) சந்தேகநபரை கைது செய்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து கோடாரி மற்றும் கையிறுகளையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவிப்பதோடு சந்தேகநபரை பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியல் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.