அஸா.ஜே-
கல்முனையில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கிப் பயணித்த கார் வண்டியொன்று இன்று (22) அதிகாலை 3 மணியளவில் அட்டாளைச்சேனை பிரதான வீதி, நிவ் ரமீஸா ஹொட்டலுக்கு முன்னால் உள்ள தொலைபேசி நிறுவனத்திற்குறிய கம்பம் ஒன்றுடன் மோதுண்டு துண்டாக்கப்பட்டவாறு மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது.
மேலும், குறித்த காரில் பயணித்த அக்கரைப்பற்றை சேர்ந்த இருவருக்கும் எவ்வித சேதமுமின்றி காற்றுப்பை (Air bag) வெளியானதன் காரணமாக ஆபத்திலிருந்து உயிர் தப்பியுள்ளனர் காரின் முன் பகுதி முழுமையாக சேதமடைந்து காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.




