கிழக்கு மாகாண வைத்தியசாலைகளின் அபிவிருத்திற்கு மாகாண பணிப்பாளர் அலுவலகம் தடையாகவுள்ளது

ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்-

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளின் அபிவிருத்திற்கு மாகாண பணிப்பாளர் அலுவலகம் தடையாகவுள்ளது என சுகாதார, சுதேச வைத்தியத்துறை பிரதி அமைச்சர்பைசால் காசீம் தெரிவித்தார்.

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சர்வதேச தாதியர்கள் தின நிகழ்வுவைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப்.றகுமான் தலைமையில் திங்கட்கிழமை (16)வைத்தியசாலை கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதிஅமைச்சர் பைசால் காசீம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர்தெரிவித்தார்.

தொடர்ந்து பிரதி அமைச்சர் பைசால் காசீம் அங்கு உரையாற்றுகையில், 

நான் சுகாதார பிரதி அமைச்சராக பதவியேற்று 9 மாதங்கள் ஆகின்றன. கிழக்கு மாகாணவைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் திருகோணமலை, மட்டக்களப்புமற்றும் அம்பாறை மாவட்டங்களின் வைத்தியசாலைகளை பார்வையிட்டோம்.

வைத்தியசாலை அபிவிருத்திற்கான மதிப்பீட்டு அறிக்கைகளை கிழக்கு மாகாண சுகாதாரபணிப்பாளர் அலுவலகத்திடமிருந்து கோரியிருந்தோம். ஆனால் மதிப்பீட்டு அறிக்கைகள்இன்றுவரை கிடைக்கவில்லை. அவைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளனவா? என்பது இன்னும்தெரியவில்லை. இதனால் இவ்வைத்தியசாலைகளுக்கு நிதிகள் ஒதுக்கீடு செய்வதில் பலசிரமங்களை எதிர்நோக்குகின்றோம்.

எமது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில்தொற்றா நோய்கள் தீவிரமாக பரவி வருகின்றது. சுமார் 40 - 50 வீதமானவர்களுக்கு தொற்றாநோய்கள் காணப்படுகின்றது. இதற்கு காரணம் நம்மவர்களின் உணவு பலக்கமாகும். இவ்வாறுநாடு பூராகவுள்ள தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு பல்வேறுசவால்களை எதிர்நோக்குகின்றது.

இன்று மாணவர்கள் மற்றும் இளைஞர்;களை விளையாட்டு மைதானங்களில் காணவில்லை.ஏனெனில் மாணவர்கள் கல்விக்காக அவர்களின் விளையாட்டு நேரங்களையும் சேர்த்துசெலவிடுகின்றனர். இதனால் கிரிக்கெட் மற்றும் உதைப்பந்தாட்ட போட்டி நிகழ்வுகளில்மைதானங்களில் மாணவர்களை காணவில்லை. இதனால் எதிர்காலத்தில் இளம் வயதில்எமது மாணவர்களும் தொற்றா நோய்க்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.

இதனை தடுக்கு முகமாகவே பாடசாலைகளில் முதலாம் பாட விதானத்தினை மாணவர்களின்உடற் பயிற்சி கல்விக்கு பயன்படுத்த சட்ட மசோதா ஒன்றினை பாராளுமன்றத்தில் கொண்டுவரவுள்ளேன்.

எமது நாட்டு தாதியர்களின் சேவைகள் வெளிநாடுகளில் பேசப்படுகின்றது. ஆனால் எமதுநாட்டு தாதியர்கள் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்காக செல்ல முடியாதுள்ளது. ஏனெனில்எமது நாட்டு தாதியர்களிடம் தாதியர் கல்வியில் பட்டம் இல்லை. இதனால் இச்சந்தர்ப்பம்எமது தாதியர்களுக்கு கிடைக்கவில்லை. 

இதனை நானும், அமைச்சர் ராஜிதவும் இணைந்து நிவர்த்தி செய்யுமுகமாக எமது நாட்டில்தாதியர் கல்வியில் பட்டப் படிப்பினை ஆரம்பிக்கவுள்ளோம்.

இதன் மூலம் எமது தாதியர்களும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளமுடியும். இதன் மூலம் அவர்கள் கூடுதலான சம்பளத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்எனவும் பிரதி அமைச்சர் பைசால் காசீம் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -