Batticaloa campus இலங்கை முதலீட்டு சபையினுடைய நிறுவனமாக அங்கிகரிப்பு - உடன்படிக்கை கைச்சாத்து

ரிதிதென்னெயில் ஆரம்பிக்கப்பட்டுள்ள Batticaloa campus நிறுவனத்தை இலங்கை முதலீட்டு சபை (BOI) நிறுவனத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக இன்று அங்கீகரித்துள்ளது. இதன் பிரகாரம் இன்று BOI நிறுவனத்திற்கும் Batticaloa campusகுமிடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.Batticaloa campus 3000 மாணவர்களைக் கொண்டு எதிர்காலத்திலே 16 பீடங்களையும் கொண்டு நிர்மாணிக்கப்படவிருக்கின்றது. 

அதற்கான கட்டட வேலைகள் இப்பொழுது மட்டக்களப்பின் எல்லைக் கிராமமான புனானை ஜயந்தியாய கிராமத்தில் கட்டப்பட்டு வருகிறது. எனவே மகாவலி அதிகார சபையினால் Batticaloa campus க்கும் சிறீலங்கா ஹிறா பௌண்டேஸனுக்குமிடையே வழங்கப்பட்டுள்ள 100 ஏக்கர் காணியில் Batticaloa campus கட்டப்பட்டு வருகின்றது. 

எதிர்வருகின்ற 2017 ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள Batticaloa campus ஐ இலங்கை முதலீட்டு சபை தனது சபையின் கீழ் அங்கீகரித்துள்ளது. அதற்கான உடன்படிக்கை இலங்கை முதலீட்டு சபையின் தலைமைக் காரியாலயமான கொழும்பு உலக வர்த்தக மையத்தின் 25 வது மாடியில் கைச்சாத்திடப்பட்டது.இலங்கை முதலீட்டு சபையின் அதன் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் ஜயசூரிய அவர்களும் Batticaloa campus ன் தலைவர் இராஜாங்க அமைச்சர் M.L.A.M.ஹிஸ்புல்லாஹ் அவர்களும் Batticaloa campus ன் முகாமைத்துவப்பணிப்பாளர் அஹமட் ஹிறாஸ் ஹிஸ்புல்லாஹ் அவர்களும் இன்று இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்கள். 

இதன் பிரகாரம் Batticaloa campus தனது சேவைகளை மிகச் சிறப்பாக வழங்கும்.வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு பேராசியர்களை இங்கு கொண்டு வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதோடு வெளிநாட்டு முதலீடுகளை தாரளமாக எந்த விதமான வரியுமில்லாமல் கொண்டு வருவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. 

அதே போன்று இந்த பல்கலைக்கழகத்தை கட்டி எழுப்புவதற்குத் தேவையான சகல தளபாடங்கள் மற்றும் உபகரணங்களையும் எந்த விதமான வரியுமில்லாமல் நேரடியாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கும், அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதே போன்று இந் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 10 வருடங்களுக்கு அரசாங்கத்திற்கு எந்த வித வரியும் வழங்க வேண்டியதில்லை. 

இவ்வாறான சலுகைகளை இந்த உடன்படிக்கை மூலம் பெறப்பட்டுள்ளது. எனவே Batticaloa campus வரலாற்றில் முக்கிய அம்சம் என்றும் அதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கும் நன்றி செலுத்துகின்றோம் என்றும் Batticaloa campus ன் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டார்கள்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -