மண்சரிவு - 36 பேர் அங்கிருந்து இடம்பெயர்வு

க.கிஷாந்தன்-
லிந்துலை, சென்கூமஸ் லெமினியர் தோட்டத்தில் 18.05.2016 அன்று மாலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 07 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேற்படி 36 பேரும் கொழுந்து மடுவத்திலும் பொது இடங்கள் மற்றும் உறவினர்கள் வீட்டிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

2015ஆம் ஆண்டு பெய்த கடும் மழையினால் குடியிருப்பு பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டதையடுத்து, நுவரெலியா மாவட்ட இயற்கை அனர்த்த முகாமைதுவ அதிகாரிகளால், மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

ஆனால், 05 மாதங்கள் கடந்த போதிலும் இவர்களுக்கான எவ்வித மாற்று நடவடிக்கைகளையும் தோட்ட நிர்வாகமும் அரசியல்வாதிகளும் செய்து கொடுக்கவில்லையென பாதிக்கபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -