தமிழகத்தின் முதலமைச்சராக மீண்டும் ஜெயலலிதா - இந்திய பிரதமர் வாழ்த்து

மிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கெடுப்பு கடந்த மே 16 ஆம் திகதி முதல் நடைபெற்றது. இன்று வியாழக்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக கூட்டணி தற்போதைய நிலைவரப்படி 126 இடங்களைப் பெற்று முன்னிலை வகிப்பதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிகின்றன.

அதேவேளை திமுக கூட்டணி 96 இடங்களிலும் பா.ம.க 4 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக செதெரிவிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார் என்பது தெளிவாகியுள்ளது. இந்நிலையில் இந்திய பிரதமர் ஜெயலலிதாவிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் ஜெயலலிதா ஆட்சியைக் கைப்பற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -