அடை மழை மற்றும் மண்சரிவு போன்ற காரணங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு 15 கோடி ரூபாவை ஒதுக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இயற்கை அனர்த்தங்களுக்கான தேசிய பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழும் 2 கோடி ரூபாவையும் தேசிய அனர்த்த சேவை மத்திய நிலையத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் கூறியுள்ளார்.