ஐரோப்பாவில் தேடப்பட்ட முக்கிய பயங்கரவாதி கைதானார்..!

பாரிஸ் தாக்குதலின் சூத்திரதாரியும் பெல்ஜியத் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் தாக்குதலை மேற்கொண்டு தப்பித்த பயங்கரவாதியுமான மொகம்மட் அப்ரினி கைது செய்யப்பட்டுள்ளார். செவண்டம் விமான நிலையத் தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் சிசிடிவியில் பதிவான மூன்று தாக்குதலாளிகளில் தொப்பி அணிந்திருந்த நபர் இவர் என நம்பப்படுகிறது.

ஐரோப்பிய காவல் துறையும் உளவுப் பிரிவினரும் வலைவீசித் தேடிய 30 வயதுடைய அப்ரினி பிரஸ்ஸல்ஸில் அண்டர்லெக்ற் மாவட்டத்தில் வைத்து கைதாகியிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. பாரிஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் தாக்குதலில் ஈடுபட்ட பல சந்தேக நபர்களின் வாழ்விடமாக இம்மாவட்டம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -