ஒலி பெருக்கியை ஆதி கூடிய இரைச்சலுடன் ஒலிக்கச் செய்த ஆட்டோ சாரதிக்கு அபராதம்...!

க.கிஷாந்தன்-
ட்டோவொன்றில் பொருத்தப்பட்ட ஒலி பெருக்கியை ஆகக் கூடிய இரைச்சலுடன் ஒலிக்கச் செய்த ஆட்டோ சாரதிக்கு கடுமையான எச்சரிக்கை செய்த நீதிபதி அந்நபருக்கு மூவாயிரம் ரூபாவினை அபராதமாக விதித்தார்.

பதுளை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதிபதி எஸ். சத்தியமூர்த்தி முன்னிலையில் மேற்குறிப்பிட்ட ஆட்டோ சாரதி 08.04.2016ல் ஆஜர் செய்ததும் நீதிபதி ஆட்டோ சாரதியை கடுமையாக எச்சரித்ததுடன் மூவாயிரம் ரூபாவினை அபராதமாகவும் விதித்தார்.

பதுளை பகுதியின் தெய்யனாவலையைச் சேர்ந்த ஏ.ஐ.ஆர் ஆனந்த என்பவரின் ஆட்டோவில் தேவைக்கு அதிகமாக அலங்காரங்களை ஏற்படுத்தி, அதில் பொருத்தப்பட்ட ஒலி பெருக்கியை இரைச்சலுடன் ஒலிக்கச் செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.

ஒலி பெருக்கியை அதிக இரைச்சலுடன் ஒலித்தமையினால், ஆட்டோவில் பயணிக்கின்றவர்களும், பாதையில் நடமாடும் பொதுமக்களும் பெரும் இடையூறுகளை எதிர்நோக்கியமை தொடர்பாகவே ஆட்டோ சாரதி மீது வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -