சிக்கினார் மயிலை வேட்டையாடிய நபர்..!

யிலை வேட்டையாடிய நபர் தொடர்பில் நேற்று இணைய செய்திகளில் பரவலாக பேசப்பட்டது. இதேவேளை, சந்தேகநபர் தொடர்பில் தகவல்களை வன ஜீவராசிகள் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியிருந்தது.

இதன்பிரகாரம், குறித்த நபர் தங்கொட்டுவை பிரதேசத்தின் பிரபல வர்த்தகர் ஒருவரின் மருமகன் என்ற விடயம் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆனமடுவ பிரதேசத்தில் சட்டவிரோத துப்பாக்கியை பயன்படுத்தி மயிலை வேட்டையாடியுள்ளதுடன், அதை புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த நபர் இத்தாலியிருந்து வந்தவர் என்பதுடன் குறித்த நபர் தொடர்பான மேலதிக தகவல்களை வன ஜீவராசிகள் திணைக்களம் திரட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. TW

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -