இக்பால் அலி-
முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். எம். ஹலீம் அவர்களின் ஏற்பாட்டில் அக்குரணை பிரதேச மக்களின் நன்மை கருதி இலவச மருத்துவ முகாம் அக்குரணை மர்ஹாபா மண்டபத்தில் 12-03-2016 நடைபெற்றது.இந்நகிழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். எம். ஹலீம் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்த வைத்திய பரிசோதனையின் போது நீரழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், கண்பரிசோதனை வேறு நோய்களுக்காகவும் இங்கு வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 2000க்கும் மேற்பட்ட மக்கன் இதில் நன்மை அடைந்தனர்.
இதற்கான அனுசரணையை லங்கா ஐ. ஓ. சீ நிறுவனம் வங்கியுள்ளது. இதில் பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுவதைப் படங்களில் இங்கு காணலாம்.



