எம்.வை.அமீர்,ஹைதர் அலி-
குறுகிய காலத்துக்குள் அபிவிருத்தியடைந்துள்ள மலேசியாவின் அபிவிருத்தி நுணுக்கங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வதற்காக அங்கு சென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தூதுக்குழுவினர் அவர்களது பயணத்தின் இரண்டாம் நாள் நிகழ்வாக
அந்நாட்டின் தேசிய ஒருங்கிணைப்புக்கான அமைச்சர் "தான் சிறி தாதுக் சேரி ஜோஷப் குருப் " அவர்களை பிரதமரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சந்தித்ததுடன் , மலேசியயாவின் தேசிய ஒருன்கினைப்பு தொடர்பான பொறிமுறைகள் பற்றி கலந்துரையாடியலும் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் அமைச்சின் நிறைவேற்று பணிப்பாளர் " ஜாந்திசன் லட்சுமணன் , உட்பட UMNO கட்சியின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர் .
மு கா சார்பில் இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன் , சிப்லி பாரூக் , ரிஸ்வி ஜவகர்ஷா .மற்றும் ஷிபான் மஹருப், இப்ரா லெப்பை சாஹிர் உட்பட முகாவின் ஏனைய தூ துக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தூதுக்குழுவினர் பல்வேறுபட்ட பயிற்சி மற்றும் கள பயணங்களிலும் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


