மின்சாரம் தடைப்படுவதற்கு நாச வேலைகளின் செயற்பாடுகளே - பிரதி அமைச்சர் அஜித்



நாட்டில் அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதற்கு நாசவேலைகளின் செயற்பாடுகளாகவும் இருக்கலாம் என மீள் சுழற்சி சக்தி மற்றும் மின்வலு பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்,

மின்சாரம் தடைப்பட்டது தொடர்பில் வெளிப்படையாக தெரியும் காரணிகள் மிகவும் அசாதாரணமானவை. இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவும் தற்போதும் இவ்வாறு மின்சாரம் தடைபட்டிருந்தமை, நாச வேலையாக இருக்குமோ என சந்தேகிக்க போதியளவு அவகாசத்தை தருவதாகத் குறிப்பிட்டுள்ள அவர்,

தொழில்நுட்ப கோளாறுகளுக்கு அப்பாலான காரணிகளின் அடிப்படையில் மின்சாரம் தடைப்பட்டதா என்பதனை தெரிந்து கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினினும் விஞ்ஞானபூர்வமான ஆய்வுகளின் அடிப்படையிலன்றி மின்சாரத் தடைக்கான காரணங்களை கண்டறிய முடியாது எனவும் அதன் பின்னரே, மின்சாரத் தடை ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் சட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -