நாட்டில் அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதற்கு நாசவேலைகளின் செயற்பாடுகளாகவும் இருக்கலாம் என மீள் சுழற்சி சக்தி மற்றும் மின்வலு பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்,
மின்சாரம் தடைப்பட்டது தொடர்பில் வெளிப்படையாக தெரியும் காரணிகள் மிகவும் அசாதாரணமானவை. இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவும் தற்போதும் இவ்வாறு மின்சாரம் தடைபட்டிருந்தமை, நாச வேலையாக இருக்குமோ என சந்தேகிக்க போதியளவு அவகாசத்தை தருவதாகத் குறிப்பிட்டுள்ள அவர்,
தொழில்நுட்ப கோளாறுகளுக்கு அப்பாலான காரணிகளின் அடிப்படையில் மின்சாரம் தடைப்பட்டதா என்பதனை தெரிந்து கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினினும் விஞ்ஞானபூர்வமான ஆய்வுகளின் அடிப்படையிலன்றி மின்சாரத் தடைக்கான காரணங்களை கண்டறிய முடியாது எனவும் அதன் பின்னரே, மின்சாரத் தடை ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் சட்டிக்காட்டியுள்ளார்.
