சி.எஸ்.என் தொலைக்காட்சியை இரண்டு அமைச்சர்கள் கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
யோஷித ராஜபக்ஸ சி.எஸ்.என் தொலைகாட்சியின் நிறைவேற்று அதிகாரி கிடையாது எனவும், அதனை போர்ம் 48 நிறுவன பதிவு ஆவணத்தில் உறுதி செய்து கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொலிஸ் நிதி மோசடி குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்படுபவர்களுக்கு பிணை வழங்க முடியாது என தெரிவிக்கப்படும் கருத்து உண்மைக்கு புறம்பானது என பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.
இந்த பிரிவினரால் கைது செய்யப்படுபவர்களுக்கு பொலிஸ் பிணை மாத்திரமே வழங்க முடியாது எனவும், நீதிமன்றத்தில் பிணை வழங்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், சி.எஸ்.என் தொலைகாட்சியில் ஒருபோதும் யோஷித்த நிறைவேற்று அதிகாரியாகவோ பங்குதாரராகவோ செயற்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இதைவிடுத்து, ஆளும் தரப்பினரால் தெரிவிக்கப்படுகின்ற கருத்துக்களை தாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பு கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துப்படுத்தும் சுமார் 15திற்கும் அதிகமான மக்கள் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.