நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதாகி வெலிக்கடை சிறையில் விளக்கமறியலில் இருக்கும் யோஷித்த ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து மூன்று நேர சாப்பாடு கொடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
யோஷித்த ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு ஏற்பவே இந்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக சிறைச்சாலை வாடாரங்கள் செய்தி தெரிவிக்கின்றன. அதேவேளை அவ்வுணவுகள் மாலை 4 மணிக்கு முன்னதாக சிறையில் கையளிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்ட்ட தினம் மற்றும் அடுத்த நாள் சிறையில் சோறும் தேங்காய் சம்பலும் மட்டுமே கொடுக்கப்படுள்ளது.