எனது சித்தப்பா பஷில் மோசம் - நாமல்

இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்துக்கு பின்னர் வெளியக சக்திகள் இருந்து செயற்படுவதாக சந்தேகம் எழுகின்றது. இதன் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கொலை செய்ய முயன்ற விடுதலைப்புலிகளை கூட விடுதலை செய்ய அரசாங்கம் துணிந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தநிலையில் நாட்டை விடுவித்த படையினரை அரசாங்கம் வேறுவிதமாக நடத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அபிவிருத்தியை நோக்காகக் கொண்டே மக்கள் அரசாங்கத்துக்கு வாக்களித்தனர்.

எனினும் இன்று அபிவிருத்திகள் தேக்கநிலையை அடைந்துள்ளன. இதனை மறைப்பதற்காகவே அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுத்து வருவதாக நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை அரசியலில் தமக்கும் சித்தப்பா பசில் ராஜபக்சவுக்கும் முரண்பாடுகள் உள்ளபோதும் தமக்குள் வேறு பிரச்சினைகள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -