நாட்டை பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியாக விழுங்கும் இட்டிகா உடன்படிக்கையை தோற்கடிக்க மக்கள் சக்தியை கட்டியெழுப்ப போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக உடனபடிக்கையினால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு எந்த பெறுமதியும் சேரவில்லை. இதன் முழு பொறுமதியும் இந்தியாவுக்கே சேரும்.
இந்திய தொழில் சந்தையானது 500 மில்லியன், இதில் 94 வீதமானோர் உரிய தொழில்களை செய்யவில்லை.
இவ்வாறான நிலையில், சேவை உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டால், முழுமையான நன்மை இந்தியாவுக்கே. இதன் பின்னர், இந்தியா, இலங்கையை பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியான இயக்கும் என்பது கட்டாயம் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
