சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவருக்கு ஒரு இலட்சம் அபராதம் - தவறின் ஆறு மாத சிறை

எப்.முபாரக்-
மூதூரில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த நபர் ஒருவருக்கு மூதூர் நீதிமன்ற நீதவான் ஜ.என்.றிஸ்வான் ஒரு இலட்சம் ரூபாய்யினை தண்டப்பணமாக செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து செவ்வாய்கிழமை (2) தீர்ப்பளித்தார். 

பூநகரிபுரம், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த மயில்வாகனம் லாகரன் வயது (28) என்பவருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

குறித்த நபர் மூதூர் பிரதேசத்தில் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு வந்திருந்த நிலையிலேயே நண்பர்களுடன் சேர்ந்து அனுமதியின்றி சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த நிலையிலே மூதூர் பொலிஸார் திங்கட்கிழமை (1) இரவு கைது செய்து மூதூர் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே மூதூர் நீதிமன்ற நீதிவான் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்தார்.

குறித்த நபர் இதற்கு முன்னரும் இவ்வாறு சாராயம் காய்ச்சிய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -