எஸ்.எச்.எம்.வாஜித்-
மன்னார் மாவட்டத்தில் மணற்குளத்தினை பிறப்பிடமாக கொண்ட அலியார் மற்றும் முசலியினை பிறப்பிடமாக கொண்ட நர்ஹுஸ் என்பவர்களின் செல்வ புதல்வி றிஸ்வீனா பேகம் 2015 ஆம் ஆண்டு இடம் பெற்ற உயர் தர பரீட்டை பெறுபேறுகள் அடிப்படையில் கலை பிரிவில் மன்னார் மாவட்டத்தில் முதல் நிலை மாணவியாகவும்,தேசிய மட்டத்தில் 43 வது இடத்தை பெற்றுள்ளார் என்று பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

இந்த மாணவி முசலி தேசிய பாடசாலையில் கல்வி கற்றவர் என்பது குறிப்பிடதக்கது.முசலி பிரதேச வரலாற்றில் முதல் தடவையாக மாவட்ட மட்டத்தில் இந்த மாணவி தான் மாவட்ட ரீதியாக கலை துறையில் முதல் நிலை மாணவியாக தெரிவாகி உள்ளார்.
இந்த மாணவியின் பெறுபேற்றினால் கிராமத்திற்கும் மற்றும் பிரதேசத்திற்கும், பெருமையினை பெற்று தந்துள்ளார் என பிரதேச செயலாளர் தெரிவிக்கின்றார்.
