2016 ஆம் ஆண்டுக்கான முதலாவது மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று 13.01.2016 காலை 09.30 மணியளவில் ஆரம்பமானது , இதன் போது மூன்று மாவட்டங்களின் இணைத்தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் இக்கூட்டத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தியினை மேற்கொள்வதில் இன்று பாரிய சவாலாக அமைந்து கொண்டிருப்பது மது , போதைவஸ்துக்கு இன்று எமது மக்கள் அடிமையாக்கபட்டுள்ளமையே காரணமாகும்.
எனவே மாணவர் , இளைஞர் சமுதாயம் தொழில் புரியும் ஊழியர்கள் உடனடியாக இதிலிருந்து விடுபட்டு மட்டக்களப்பு மாவட்டத்தினை கட்டியெழுப்ப முன்வர வேண்டும் எனவும் இதனை கட்டுப்படுத்துவதற்கான முழு ஏற்பாட்டினையும் தான் செய்து கொண்டிருப்பதாகவும் கூறிய முதலமைச்சர் இக்கூட்டத்தின் போது Senior DIG , DIG , ASP , மதுபாவனை ஒழிப்பு அதிகாரிகள் அனைவருக்கும் உடனடியாக உத்தரவினையும் வழங்கியுள்ளார்




