25 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பு - அமைச்சர் சஜித்

அஷ்ரப் ஏ.சமத்- 

திஸ்ச மகராம நீர் விநியேகத்திட்டத்தினை ஆரம்பி அமைச்சா் சஜித் சுவாரசமான செய்தி - திஸ்ஸமகராம பிரதேசத்தில் அசுத்தமான குடி நீர் 2 போத்தல்களில் எடுத்து நீர்விநியோக வடிகாலமைப்புச் ச2 பையின் பொறியியலாளா் இது அசுத்தமான குடி நீர் என கையெழுத்திட்டு அனுப்புமாறு தெரிவித்தேன் ஆனால் அவா்கள் சாரய போத்தல்களில் அந்த நீரை எடுத்து அனுப்பியிருந்தாா்கள் நான் சாரயமே குடிக்காத நான் சாரய போத்தல்களை எடுத்துக் கொண்டு பாராளுமன்றமும் அமைச்சரவைக்கும் கொண்டு செல்லமுடியாது. அப் போத்தல்களை மீண்டும் அவர்களிடம் அனு்ப்பி வேறு ஜேம் போத்தலிகளை சுத்தப்படுத்தி அனுப்பித்தான் அசுத்த நீரை எடுத்து மீண்டும் அசுத்த நீர் என பொறியியலாளா் அனுமதித்து கையெழுத்த பின் அதனை பாராளுமன்றமும் அமைச்சரவைக்கும் கொண்டு சென்றேன். 

என நேற்று(15) புதிய நீர்விநியோகத் திட்டததினை திஸ்ஸமகராமையில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சா் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

நான் அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு லக்ச 3365 ருபா வை ஒதுக்கீடு செய்தனா். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உரிய பகுதியில் சுத்தமான குடி நீர் இல்லாத பிரதேசத்தில் தமது அமைச்சின் கீழ் உள்ள பொறியியல் கூட்டுத்தாபணத்தின் ஊடகா முன்னெடுக்கும் படி தனக்கு நீர்விநியோக வடிகாலமைப்பு அமைச்சா் றவுப் ஹக்கீம் அறிவிருத்தல் தந்துள்ளாா். அதற்காக அந்த அமைச்சருக்கும் நாம் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரவித்தார்.


நேற்று (15)ஆம் திகதி திஸ்ஸமாராம லுனுகம்வேர மத்தள பிரேதசத்தில் வீடு மற்றும் நீர் விநியோகத்திட்டங்களின் நிர்மாணப்பணிகளை அமைச்சா் சஜித் பிரேமதாச ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தாா். 

அவா் அங்கு தொடா்ந்து உரையாற்றுகையில்

அடுத்த ஒன்றரை வருடத்திற்குள் சகல திஸ்ஸமகராம பிரதேச மக்களுக்கு சுத்தமான நீறை அருந்த சா்ந்தா்ப்பம் கிடைக்கும். அதே போன்று கடந்த காலங்களில் அசுத்த மான குடிநீரை அருந்தி சிறுநீா் வியாதிக்குள்ளானவா்கள் வருடக்கணக்கில் கொழும்பு வைத்தியசாலையில் சத்திரக் சிகிச்சைக்காக காத்திருக்காமல் திஸ்ஸமகராம வைத்தியசாலையிலும் சிறுநீா் வியாதிக்குள்ளானவா்களுக்கான சத்திரக் சிகிச்சை பகுதி ஆரம்பிக்க சுகாதார அமைச்சா் ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளேன். என அமைச்சா் சஜித் பிரேமதாச தெரிவித்தாா்.

அதே நேரத்தில் லுனுகம பிரதேசத்தில் 43வது செவன அரந ஜனஉதான கிராம வீடமைப்புத் திட்டத்தில் 25 வீடுகளைக் கொண்ட வீடமைப்புக் கிரமாத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு 6 மாத காலத்திற்குள் வீடமைப்பு திறந்து வைக்கப்படும். 

இதற்காக ஒவ்வொரு குடும்பதற்திற்கும் 2 இலட்சத்து இருபா வீடமைப்புக் கடனும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 போ்ச் காணியும் வழங்கி வைக்கப்பட்டன. 

அடுத்த 5 வருடத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 25 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பு வீடு காணி இல்லாதவருக்கு வீடுகள், நீர் மற்றும் அபிவிருத்திகளையும் நான் வழங்குவேன், இதில் கட்சி பேதம் பாராமல் எனது சேவை ஏழை எளிய மக்களை சென்றடையும்.

கடந்த காலத்தில் ஹம்பாந்தோட்டை பகுதியில் கட்டுமானப் பகுதிகளை ஆரம்பித்து அடிக்கல் மட்டும் நாட்டிவிட்டு பல்வேறு நிர்மாணக் கம்பணிகளுக்கு வழங்கி கொமிஷனைப் பெற்றாா்கள். 

ஆனால் நான் எனது அமைச்சின் கீழ் உள்ள சகல நிர்மாண வேலைகளையும் எவ்வித நிர்மாணமும் இல்லாமால் பொறியியலாளா்களும் இயந்திரங்களையும் அலுவலகங்களில் துாங்கிக் கொண்டு இருக்காமல் அவா்களை இங்கு அழைத்து வந்து அரச வளங்களை பாவித்து இந்த நிர்மாண வேலைகளை செய்யும்படி நடவடிக்கை எடுத்துள்ளேன்.எனவும் அமைச்சா் சஜித் பிரேமதாச தெரவித்தாா்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -