மதுபானசாலையை மூடுமாறு கோரி பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

எம்.எம்.ஜபீர்-
நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அன்னமலை வேப்பையடி மதுபானசாலையை உடனடியாக மூடுமாறு கோரி அப்பகுதி பொதுமக்கள் இன்று திங்கட்கிழமை வேப்பையடி செல்வ வினாயகர் ஆலயம் முன்பாக அமைதியான முறையில் சுலோகங்களை ஏந்திக் கொண்டு பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது மதுபானச்சாலைக்கு அருகில் பாடசாலை, வைத்தியசாலை, கோயில்கள், மக்கள் குடியிருப்புக்கள் காணப்படுகின்றன. இந்த மதுபானச்சாலையால் பாரிய சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன் ஆகியோர்களிடம் பொது மக்களால் கையொப்பமிட்ட மகஜர்களும் கையளிக்கப்பட்டன.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -