அனைவரும் முன்வாருங்கள் - வியந்து பார்க்கும் அளவு இலங்கையை மாற்றுவோம் - அம்பாறையில் மைத்திரி

லகமே வியந்து பார்க்கும் அளவுக்கு சிறந்ததொரு நாடாக இலங்கையை மாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

நாடளாவிய ரீதியிலுள்ள அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு, அம்பாறை டீ.எஸ்.சேனநாயக்க கல்லூரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இந்த நாட்டிலுள்ள அனைத்துச் சமூகங்களினதும் கலாசாரம் பாதுகாக்கப்படும். மேலும், பௌத்த தர்மத்தை பாதுகாக்க சிறுவர்கள் உட்பட அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.

அம்பாறை மாவட்டத்தில் தர்ம பாடசாலைகளை மேலும் அபிவிருத்தி செய்வதற்காக அமைச்சர் தயா கமகேயின் வேண்டுகோளுக்கமைய எதிர்காலத்தில் 50 அறநெறிப் பாடசாலைகளை அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -