ஹிருனிகாவின் சண்டித்தனத்துக்கு பின்னனி..?

ட்கடத்தல், மற்றும் தாக்குதல் நடத்தி அச்சுறுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஹிருனிகா பிரேமசந்திரவுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளன.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முசம்மில், ஹிருனிகா பிரேமசந்திரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து அரசாங்கத்தின் மீது குற்றம்சுமத்தினார்.

இதேவேளை, மேல் மாகாண சபையின் உப தலைவர் யசபால கோரலகெவும், ஹிருனிகாவின் செயற்பாடுகள் தொடர்பாக விமர்சனம் தெரிவித்துள்ளார்.

ஹிருனிகா பிரேமசந்திர எல்லா தருணங்களிலும், நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொருந்தாத செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஹிருனிகா யாருடைய அதிகாரத்தைக் கொண்டு இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடுகிறார் என ஜனசெத்த முன்னணியின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் கேள்வியெழுப்பினார்.

கடந்த 20 ஆம் திகதி தெமட்டகொட பகுதியில் 34 வயதான இளைஞர் ஒருவரை ஹிருனியாவின் ஆதரவாளர்கள், என கூறப்படும் சிலர் கடத்திச் சென்றதை அடுத்தே இந்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -