ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் அழைப்பாணை அனுப்பியுள்ளார்.
2011, 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் தனது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை வழங்காதமைக்கு எதிராக எதிர்வரும் ஜனவரி 13 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக இன்று தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பாகவே மேற்படி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
