சம்மாந்துறை கல்முனை தொகுதியை பிரதிநிதித்துவபடுத்தி தில்சாத் போட்டி.!

கே.சீனி முகம்மது-
ளைஞ்ஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்ப்புமனு தாக்கல் இன்று நாடு பூராகவும் இடம்பெற்றது.

இதில் அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திலும் இவ் வேட்புமனு தாக்கல் இடம்பெற்றது. இதில் தேசிய இளைஞ்சர் சேவை மன்றத்தின் அதிகாரி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் கல்முனை போலிஸ் நிலைய அதிகாரிகள் இதில் பிரசன்னமாகி இருந்தனர்.

எதிர்வரும் 07.11.2015 இல் நடைபெறவுள்ள தேர்தலில் கல்முனை சம்மாந்துறை ஆகிய இரு தேர்தல் தொகுதிகளையும் இணைத்ததாக போட்டியிட ஜனாதிபதி சாரணரும் சமூக ஆர்வலருமான ஏ எம் முஹம்மத் தில்சாத் இன்று தனது வேட்ப்பு மனுவை பிரதேச செயலாளர் ஏ எல் எம் சலீமி டம் கையளித்தார்.

பல்வேறு சமூக அமைப்புகளில் பதவி வகித்து வரும் தில்சாத் தேசிய சர்வதேச விருதுகளையும் வென்ற ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -