180 மில்லியன் ரூபாய்கள் செலவுகள் செய்த ஜனாதிபதி மைத்திரி -மகிந்த தங்கம்போல

னாதிபதி வாசஸ்தல அமைப்புக்காக 180 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்படவுள்ளதாக இன்று செய்திகளில் வெளியான தகவல் குறித்து ஜனாதிபதி செயலகம் தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி இரண்டு பழைய வீடுகளை இணைந்து ஜனாதிபதிக்கு வாசஸ்தலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுவதாக செயலகத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதன்போது வாகன தரிப்பிடங்கள், பாதுகாப்பு படையினருக்கான தங்குமிடங்களும் செப்பனிடப்படவுள்ளன.

கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி வாசஸ்தலத்தில் நீர்கட்டணமாக 15 மில்லியன் ரூபாய்கள் வரை செலவிடவேண்டியிருக்கும்.

இதனை கருத்திற்கொண்டே பழைய இரண்டு வீடுகளை இணைத்து வாசஸ்தலத்தை அமைக்க முடிவெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, BMW கார்கள்  உட்பட்ட வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னைய ராஜபக்ச அரசாங்கத்திலேயே மேற்கொள்ளப்பட்டன என்றும் செயலகம் குறிப்பிட்டுள்ளது.-மநி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -