அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஒன்றுகூடல்..!

பைஷல் இஸ்மாயில் –
ம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஊடகவியலாளர்களின் ஒன்று கூடல் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) 10.00 மணிக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் ரீ.கே.றஹ்மத்துல்லா தெரிவித்தார்.

சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த ஒன்று கூடல் நிகழ்வின்போது, ஊடகவியலாளர்களின் கடந்தகால நிகழ்வுகள் பற்றியும், அவர்களிடத்தில் நிலவும் குறைபாடுகள் பற்றியும் ஆராயப்படவுள்ளன எனவும் இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்ளமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், சம்மேளனத்தின் கூட்டறிக்கை, பொருளாளர் அறிக்கையுடன் சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ்.இஸ்ஸடீனின் பிரதானமான உரையும் இடம்பெறவுள்ளதாகவும் சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் ரீ.கே.றஹ்மத்துல்லா மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -