அமைச்சு பதவி வழங்கியதில் சந்திரிக்காவுக்கு கவலை..!

க்கள் ஆணை வழங்கப்படாத சிலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டிருப்பது கவலையளிப்பதோடு அதிருப்தியில்லை எனவும் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்திற்குள் இந்த பதவிகள் வழங்கப்பட்டிருப்பதால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சந்திரிகா குமாரதுங்க தனது உத்தியோகபூர்வ முகநூலில் தெரிவித்துள்ளார்.

தனிக்கட்சிக்கு ஆட்சியை அமைப்பதற்கு சந்தர்ப்பம் இல்லாததினால் இப்படியான மாற்றுவழிகளை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் தேசிய அரசாங்கம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை ஜனவரி 8ஆம் திகதி மேற்கொண்டதைப் போன்று எதிர்காலத்திலும் தனது அளப்பரிய சேவையை நாட்டு மக்களுக்கு வழங்க தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -