கோட்டாபயவை பாதுகாப்பதற்காகவே பொய்யான சாட்சியைக் கூறினேன் - காமினி

பாரிய ஊழல், முறைகேடுகள் குறித்து கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவை பாதுகாப்பதற்காகவே பொய்யான சாட்சியைக் கூறியதாக ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியான ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க வளாகத்தில் நடைபெற்று வரும் விசாரணையில் தான் பொய்ச் சாட்சி கூறியதாக அரச சட்டத்தரணிகள் முன்னிலையில் ஜயசுந்தர ஏற்றுக் கொண்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவின் மீது தான் வைத்த அளவு கடந்த அன்பின் காரணமாக அவரை ஆபத்தில் தள்ளிவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு பொய் கூறினேன் எனவும் ஆணைக்குழு முன்னிலையில் நேற்று கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -