இஸ்லாமிய வரலாற்றில் இப்றாஹீம் நபியின் தியாகத்தை படிப்பினையாகத் தந்த திருநாளாம் புனித ஹஜ் பெருநாள் தினத்தில் ஒற்றுமையுடனும், தியாகத்துடனும் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவ்வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இப்றாஹீம் நபியின் தியாகத்தை உணர்ந்து கொண்டது மட்டுமல்லாமல், அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்தவர்களாக இன்று நாம் பெருநாளைக் கொண்டாடுகின்றோம்.
இந்த இனிய பெருநாள் தினத்தில் எமது சமூகத்தவர்களுடனும், பிற சமூகத்தவர்களுடனும் ஒற்றுமையுடனும் வாழ்ந்து இன்ப, துன்பங்களில் பங்கெடுக்கும் உன்னத பணியை செய்ய முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும்.
எமது நாட்டில் நாம் சந்தோஷமாக பெருநாளைக் கொண்டாடுகின்ற இன்றைய நிலையில் உலகின் பல பிரதேசங்களில் பல்வேறு துன்பங்களுடன் எமது சகோதர்கள் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்காக எதிரிகளின் கைகளை முடக்கவேண்டி இரு கையேந்தி நாம் அனைவரும் இறைவனிடம் பிரார்த்திக்கவேண்டும்.
நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள இன்றைய நல்லாட்சியில் முஸ்லிம்கள் பொறுமையுடன் வாழ்ந்து எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கான இருப்பினை பெற பிரார்த்திப்பதோடு எமக்கு முன்னுள்ள சவாலை புத்திசாதுரியத்துடன் எதிர்கொள்ள முனைய வேண்டும்.
இஸ்லாமிய வழிகாட்டுதல்கள் முழு உலக பல்லின மக்களுக்கும் பொதுவானதே. இதனை புரிந்து கொண்ட பலர் தமது காழ்ப்புணர்ச்சியினை பல்வேறு கோணங்களில் முஸ்லிம் சமூகத்தின் மீது திணிக்க எத்தனிக்கின்றனர். இதனை முறியடிப்பதற்கு முதலில் முஸ்லிம் சமூகம் ஒன்றிணைய வேண்டிய தேவை இருக்கின்றது. இந்த ஒன்றிணைவின் மூலம் தகுந்த பாடம் இஸ்லாத்தின் எதிரிகளுக்கு புகட்டப்பட வேண்டும்.
இதற்கான முன்மொழிவுகளை இன்றைய இஸ்லாமிய தலைவர்கள் அனைவரும் ஒன்றித்து எடுக்கவேண்டிய தருணம் வந்திருக்கின்றது. இந்நன்நாளில் அதற்கு அடித்தளமிட பிரார்த்திப்போமாக எனவும் தெரிவித்துள்ளார்.
ஊடகப் பிரிவு,விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்
உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வுகிடைக்க இன்றைய தியாகத் திருநாளில் நாம் அனைவரும் பிரார்த்திக்கவேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் விடுத்துள்ள பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவரது பெருநாள் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது புனித மக்கமா நகரில் தியாகத்தை நினைவூட்டும்வகையில் ஒன்று கூடியுள்ள அனைத்துலக மக்களும் எந்த விதமான பேதமுமின்றி இறையோனின் கட்டளைக்கு அடிபணிந்து பிரார்த்தனைகளிலும், தொழுகைகளிலும், நல்லமல்களிலும் ஈடுபட்டுள்ளார்கள்.
ஆண்டான், அடிமை என்ற பேதமின்றியும், கறுப்பன் வெள்ளையன் என்ற நிற வேறுபாடின்றியும், நாடு குல பேதங்களை மறந்து இஸ்லாமியர்களாகிய அனைவரும் புனித மக்கமா நகரில் ஹஜ்ஜுக்கடமையில் ஈடுபட்டுள்ளனர். இன்றையத் தியாகத் திருநாள் சமூகங்களுக்கிடையே பல்வேறு படிப்பினைகளை உருவாக்கி உள்ளது.
இறையோனின் கட்டளைக்கு அடி பணிந்து நபி இப்றாகிம் (அலை) அவர்கள் அன்பு மைந்தன் இஸ்மாயிலை அருத்து குர்பான் கொடுப்பதற்கு தயாரான வரலாறும், அதன் பின்னரான பல்வேறு சம்பவங்களும் இந்த புனித ஹஜ்ஜுக் கடமையில் உணர்த்தப்படுகின்றது. இஸ்லாமியர்களாகிய நாம் ஒற்றுமையுடன் செயல்படுவதற்கும் ஏனைய சமூகங்களுடன் பரஸ்பர நல்லுறவுடன் வாழ்வதற்கும் திடசங்கற்பம் பூணவேண்டும்.
வடக்கு கிழக்கில் யுத்தக் கோரப்பிடிக்குள் சிக்கியிருந்த நாம் இன்று அதிலிருந்து விடுபட்டு சாந்தி சமாதானத்துடன் வாழ்வதற்கான சூழல் இன்று உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அருமையான சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொண்டு இலங்கையர்களாகிய நாம் எந்த விதமான பேதமுமின்றி வாழப்பழகிக்கொள்வதன் மூலமே சமூகங்களுக்கிடையே திடர்ந்து நல்லுறவு நீடிக்கும். இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸின் தலைவரும் இ முன்னாள் அமைச்சருமான
அல் -ஹாஜ் ஏ .எல் .எம்.அதாஉல்லாஅவர்களின் ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துச்செய்தி
தியாகங்களே பாடங்களாகின ..........
உலக முஸ்லிம்கள் அனைவரும் இன்று தியாகத்திருநாள் ஹஜ்ஜுப்பெருநாளை கொண்டாடுகின்றனர். அவர்கள் வாழுகின்ற இடங்களிலெல்லாம் நிம்மதியோடு வாழ பிரார்த்திக்கின்றேன். குறைகள் நீங்கி பெரு வாழ்வும் பிரார்த்திக்கின்றேன்.
நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் தனது செல்வப்புதல்வன் இஸ்மாயில் ( அலை ) அவர்களை அறுக்க கணவு கண்டு அதனை தியாகத்தோடு நிறைவேற்ற துணிந்த போது தியாகம் உலகிற்கு எடுத்துக்காட்டபட்டது .அதில் அவர் வெற்றி பெற்றார் . இவ்வாறு இறுதி நபி முஹம்மது நபி (ஸல் ) அவர்கள் வரையும் எல்லா நபிமார்களும் தியாகத்தின் மூலமாகத்தான் வெற்றி பெற்றனர் .அதன் பிரதிபலன் தான் இன்றைய வியாபகமான இஸ்லாமிய உலகு . அத் தியாகங்கள் பாடங்களாக வரலாற்றில் மாறின .
தியாகம் தனி மனிதனோடு இணைந்திருக்கக்கூடிய நற்பண்ன்பாகும் தாய் தந்தையரின் தியாகங்கள் இஆசிரிய மாணவர்களின் தியாகங்கள் இஅரச-அரசியல் வாதிகளின் தியாகங்களினால் சமூகம் அடைந்த அடைவுகளை வரலாற்றில் நாம் அறிந்திருக்கின்ரோம். அவைகள் நமக்கு பாடங்களாயும்இ முன்னுதாரணங்களாயும் அமைந்தன. அல்ஹம்துலில்லாஹ். தியாகங்கள் தொடரட்டும் .
ஹஜ் கடமையை நிறைவேற்றுவதர்க்கு புனித மக்கமாநகரம் சென்றுள்ள ஹஜ்ஜாஜிகளின் ஹஜ் கடமைகள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களின் நியாயமான பிரார்த்தனைகலும் நிறைவேறட்டும்.
ஏ .எல் .எம்.அதாஉல்லா
தலைவர் - தேசிய காங்கிரஸ்
முன்னாள் அமைச்சர்
