எமது ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் ஊடக கற்கையில் சித்தியடைந்துள்ளார்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக பகுதி நேர ஊடகவியல் கற்கை நெறி பயிற்சியில் ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் சித்தியடைந்துள்ளார்.

நேற்றைய தினம் வெளியிடப்பட்ட பரீட்சை முடிவின் படி இவர் சித்தியடைந்துள்ளதாக அறியமுடிகிறது.

கடந்த 2010 ஆண்டு இக்கற்கை நெறியில் இணைந்து சிறப்பாக முயற்சி செய்து இச்சித்தியை பெற்றுள்ளார்.

முதன் முதலில் யாழ் பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி நிலையத்தில் ஊடகவியல் கற்கை நெறியை பூர்த்தி செய்த முஸ்லீம் மாணவர் இவராவார்.
இவருடன் 12 மாணவர்கள் இக்கற்கை நெறியில் இணைந்து கற்ற போதிலும் இருவரே சித்தியடைந்துள்ளனர்.

அத்துடன் ஏற்கனவே யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் சிறப்புபட்ட கற்கைநெறியை இவர் பூர்த்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -