செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்...!

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார். 

இரண்டு முறை மாட்ரிட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவரும் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான செரீனா, மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கார்லா சுவாரஸ் நவாரோவை 6-1, 6-3 என்ற நேர்செட்களில் வென்றார். 

அரையிறுதியில் பெட்ரா கிவிடோவா அல்லது ஐரினா கேமலியா பெகுவுடன் செரீனா விளையாடுவார். 

இதேபோல் மற்றொரு காலிறுதியில் ரஷ்யாவின் மரிய ஷரபோவா கடுமையாகப் போராடி கரோலின் வோஸ்னியாக்கியை 6-1, 3-6, 6-3 என்ற செட்கணக்கில் வென்றார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -