வவுனியாவில் வர்த்தக சங்கத்தின் கர்த்தாலுக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகம் ஆதரவு!

யாழில்‬ ‪‎வித்தியாவிற்கு‬ ‪‎நிகழ்ந்த‬ ‪‎மிலேச்சத்தனமான‬ ‎கொடூரத்திற்கு‬ ‪‎உடனடி‬ ‪நீதி‬ ‪‎நிலை‬ ‪நாட்டப்படவேண்டும்‬ என்ற நோக்கோடு இன்றைய தினம் வர்த்தக சங்கத்தால் கடையடைப்பிற்கும், காலை 10 மணிக்கு வவுனியா பேரூந்து தரிப்பு நிலையத்தில் பேரணியும் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதாக வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு எஸ்.இராசலிங்கம் தெரிவித்திருந்தார், இவ் பேரணிக்கும் கர்த்தாலுக்கும் தமிழ் தேசிய இளைஞர் கழகம் தமது பூரண ஆதரவையும் பங்களிப்பையும் வழங்கும் என கழகத்தின் செயலாளர் திரு ஸ்ரீ.கேசவன் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்;

புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் சட்டத்தால் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் அதற்கு எமது நீதித்துறை உச்ச தண்டனை வழங்கி சமூகவிரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்னுதாரணமாக செயற்படவேண்டும் எனவும், 

அப்பாவி மாணவி வித்தியாவின் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை எந்த விதத்திலும் தப்பிக்கவிட முடியாது. குற்றவாளிகள் தப்புவதற்கு எவரும் எந்தவிதத்திலும் உதவகூடாது என்பதுடன் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு உதவுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களையும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துவிட இடந்தரக்கூடாது.

இத்தகைய மிலேட்சத்தனமான சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்காக வாதாடுவதற்கு முன்வரும் சட்டத்தரணிகள்கூட இவ்வாறான சமூகவிரோதக் செயல்களுக்கு துணை புரிபவர்களாகவும் அதனை ஊக்குவிப்பவர்களாகவுமே சமூகத்தால் கணிக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -