ந.குகதர்சன்-
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை லண்டன் கனக தூர்க்கை அம்மன் ஆலயம் மூலம் பெறப்பட்ட அப்பியாசக் கொப்பிகளை வாகரை மகா வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.
பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டதுடன், பேரவை பிரதி நிதிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பாடசாலையில் கல்வி கற்கும் பத்தாம் தரம், சாதாரண தர மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
இவ் உதவியை வழங்கிய மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினர், லண்டன் கனக தூர்க்கை அம்மன் ஆலய நிருவாகத்தினர் ஆகியோருக்கு தமது நன்றிகளை தெரிவிப்பதாக அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் தெரிவித்தனர்.(ந)





