பொது மன்னிப்புக் காலம் நிறைவு - நாளை முதல் தப்பியோடிய இராணுவ வீரர்கள் கைது!

சேவையில் இருந்து தப்பியோடிய இராணுவ வீரர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் நாளை முதல் இடமபெறவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. 

சேவையில் இருந்து தப்பியோடிய இராணுவ வீரர்கள் சட்ட ரீதியாக இராணுவத்தில் இருந்து விலக வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் இன்றுடன் நிறைவடைவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். 

இதன்படி குறித்த காலப்பகுதியில் சட்ட ரீதியாக விலகாதவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை நாளை முதல் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை குறித்த பொது மன்னிப்புக் காலத்தில் இதுவரை 23,600 பேர் இராணுவத்தில் இருந்து சட்டரீதியாக விலக கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

அவர்களில் 18,500 பேர் சட்ட ரீதியாக விலக்கப்பட்டுள்ளதாக ஜயநாத் ஜயவீர மேலும் குறிப்பிட்டுள்ளார். 

மீதமுள்ளவர்களையும் எதிர்வரும் சில தினங்களில் விலக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.(ந-த்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -