சிங்கப்பூர் ஒத்துழைப்புடன் நகர அபிவிருத்தி தொடர்பான 3 நாள் செயலமர்வு கொழும்பில் ஆரம்பம்!

அஸ்லம் எஸ்.மௌலானா-
லங்கை நகர அபிவிருத்தி அதிகார சபையும் சிங்கப்பூர் நகரமயமாக்கல் திட்டமிடல் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நகர அபிவிருத்தி தொடர்பிலான மூன்று நாள் செயலமர்வு நேற்று திங்கட்கிழமை கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் நகர அபிவிருத்தி நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு செயலமர்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதில் கல்முனை மாநகர முதல்வரும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர், கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம்.முசம்மில்உட்பட மற்றும் பல முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ள இந்த செயலமர்வில் கல்முனை முதல்வர் நிஸாம் காரியப்பர் உட்பட நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகளும் மற்றும் பல துறைசார் நிபுணர்களும் பங்குபற்றவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -