அஸ்லம் எஸ்.மௌலானா-
இலங்கை நகர அபிவிருத்தி அதிகார சபையும் சிங்கப்பூர் நகரமயமாக்கல் திட்டமிடல் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நகர அபிவிருத்தி தொடர்பிலான மூன்று நாள் செயலமர்வு நேற்று திங்கட்கிழமை கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் நகர அபிவிருத்தி நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு செயலமர்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இதில் கல்முனை மாநகர முதல்வரும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர், கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம்.முசம்மில்உட்பட மற்றும் பல முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ள இந்த செயலமர்வில் கல்முனை முதல்வர் நிஸாம் காரியப்பர் உட்பட நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகளும் மற்றும் பல துறைசார் நிபுணர்களும் பங்குபற்றவுள்ளனர்.
.jpg)
.jpg)