நிரந்தர ஆசிரியர் நியமனம் கோரி ஆர்ப்பாட்டம்: முதலமைச்சர் தீர்த்து வைப்பு

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் பல வருடகாலமாக தொண்டர் ஆசிரியர்களாக பணி புரியும் ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் கோரி இன்று காலை கிழக்கு மாகாண சபை முன்றலில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பட்டத்தில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்களை கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவ்விடத்துக்குச் சென்று அவர்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை ஏற்று ஒரு மாத காலத்துக்குள் நிரந்தர தீர்வொன்றினை பெற்றுத்தருவதாகக் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு முதலமைச்சருடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரை ரெட்னமும் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருடன் உரையாடினர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -