கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் பல வருடகாலமாக தொண்டர் ஆசிரியர்களாக பணி புரியும் ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் கோரி இன்று காலை கிழக்கு மாகாண சபை முன்றலில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்பட்டத்தில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்களை கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவ்விடத்துக்குச் சென்று அவர்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை ஏற்று ஒரு மாத காலத்துக்குள் நிரந்தர தீர்வொன்றினை பெற்றுத்தருவதாகக் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு முதலமைச்சருடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரை ரெட்னமும் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருடன் உரையாடினர்.