எம்.வை.அமீர்-
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் புதிதாக நியமனம் பெற்ற, தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் பணிபுரிபவர்களாலேயே மேற்படி ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வு 2015-03-31 ல் பிரயோக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் பீ.ரீ.றாசீக் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்கள் கலந்து கொண்டார்.
ஏனைய அதிதிகளாக பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சபீனா இம்தியாஸ் அவர்களும் கலைகலாச்சார பீடத்தின் பீடாதிபதி எம்.அப்துல் ஜப்பார் அவர்களும் கலந்து கொண்டதுடன் கல்விசார ஊழியர் சங்கத்தின் தலைவர் வை.முபாரக் மற்றும் செயலாளர் எம்.இசட் முகம்மட் றிஷான், பிரயோக விஞ்ஞான பீட கல்விசாரா நலன்புரி அமைப்பின் தலைவர் ஏ.எம்.றிபாயிஸ் முகம்மட் போன்றோரும் ஏனைய கல்விசாரா உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.