CSN தொலைக்காட்சியை மூட முடிவு: நாளை ஊழியர்களுக்கு சம்பளம்

CSN தொலைக்காட்சி சேவையை மூட CSN தொலைகாட்சி முகாமைத்துவம் முடிவெடுத்துள்ள நிலையில் அங்கே தொழில் புரிந்த 150 ஊழியர்களுக்கும் அவர்களது சம்பளத்தை வழங்க தீர்மானித்துள்ளது. CSN தொலைக்காட்சியில் மூன்று வருடங்களுக்கு மேல் வேலை செய்த ஊழியர்களுக்கான ஒரு வருட சம்பளத்தை வழங்க CSN முகாமைத்துவம் முடிவெடுத்துள்ளது.

இதன் படி CSN தொலைக்காட்சியில் 3 வருடமாக வேலை செய்த ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் 7.5 மடங்கினை வழங்கவுள்ளதாக அதன் முகாமைத்துவம் அறிவித்துள்ளது.

இதற்கமைய ஒரு வருட சம்பளத்தினை நாளை வழங்கவுள்ளது. CSN முகாமைத்துவ அறிக்கையின் படி மூன்று ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்த 50க்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர்.

கடந்த காலங்களில் இந்த நிறுவனம் புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவு திட்டத்தில் விளையாட்டு தொலைக்காட்சி சேவைகளுக்கு ஆயிரம் மில்லியன் வரி கட்ட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -