இலங்கையில் முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாக்கவும்: சீனா வலியுறுத்தல்

லங்கை- சீனா ஒப்பந்தங்கள் மற்றும் வணிக ஒப்பந்தங்களை மதித்து முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் சீனா வலியுறுத்தியுள்ளது.


சீனத் தூதுவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த புதன்கிழமை கூடிய அமைச்சரவையில், சீனாவினால் பெரும் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வந்த துறைமுக நகரத் திட்டத்தை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, இலங்கை அமைச்சரவையின் இந்த முடிவை ஏற்றுக் கொள்வதாகவும் இலங்கை அரசாங்கத்துக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் துறைமுக நகர் திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளதுடன், முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -