நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்!

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் யோசனை ஒன்றை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ளது. புதிய அரசியலமைப்புத் திருத்தத்தில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என சுதந்திரக் கட்சி யோசனை முன்வைத்துள்ளது.

நாடாளுமன்றம் தற்போது 225 பிரதிநிதிகளை கொண்டுள்ளது இதனை 235 ஆக அதிகரிக்க வேண்டும்.வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போதைய வாக்காளர் எண்ணிக்கையை விட அரைவாசியாக குறைந்து காணப்பட்ட காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆக இருக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டிருந்தனர்.

இதனால், உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போதைய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு அமைய உயர்த்தப்பட வேண்டும்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வதை மக்கள் எதிர்க்கவில்லை. அமைச்சர்களின் எண்ணிக்கை உயர்வதையே மக்கள் எதிர்ப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -