நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலயத்துக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு






யு.எம்.இஸ்ஹாக்-
ற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலயத்துக்கு பாட சாலையின் பழைய மாணவனும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான சி.எம். ஹலீம் ஒரு தொகுதி பாடசாலை உபகரணங்களை இன்று அதிபர் ஆசிரியர்களிடம் கையளித்தார் .

பாடசாலை அதிபர் எம்.எல்.ஏ.கையூம் தலைமையில் இன்று காலை காலை ஆராதனை கூட்டத்தில் இடம் பெற்ற நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சி.எம். ஹலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த உபகரணங்களை வழங்கி வைத்தார் .
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சி.எம். ஹலீம் அங்கு உரையாற்றிய போது இப்பாட சாலைக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் உதவியுடன் அவரது பெயரில் மூன்று மாடி கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளேன் விரைவில் அது நிறைவேற்றப் படும் என தெரிவித்தார் .

பிரதி அதிபர் வீ.மொதமேது ஸம் ஸம் உதவி அதிபர் ஏ.எம். முனாசிர் ஆகியோரும் அங்கு உரையாற்றினார்கள். பாடசாலை வளாகத்தில் மரக்கறி விதை நடுகை விழாவும் இடம் பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -