எதிர்வரும் பொது தேர்தலில் மட்டு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன்-முரளிதரன்!

திர்வரும் பொது தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என நம்புவதாக முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தான் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பொது தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அதிக வாக்குகள் பெற்று தரும் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -