மார்பகப் புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி



எப்.எச்.ஏ. ஷிப்லி-
நிந்தவூர் கென்ட் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் "மார்பகப் புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி" நிந்தவூர்அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. அஷ் ஷெய்க்அல்-ஹாபிழ் ஏ.எம். அஸ்ஹர் (தப்லீகி) அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

வைத்தியர்களான Dr. SM. Shafraz , Dr. SBAM. Mujahith , Dr. MY. Nibras Mohamed . Dr. AA. Rikasa, Dr. R. Rayeesa Farwin ஆகியோர் இதில் பிரதான வளவாளர்களாகப் பங்கு பற்றினர்.

இலங்கையில் அதிகமான பெண்கள் இதற்கு இலக்காகி அதிக மரணங்கள் சம்பவிப்பதாலும் முறையானஅணுகுமுறைகள் மூலம் இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும் என்பதனாலும் இதுதொடர்பான விழிப்பூட்டல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான கையேடு ஒன்றும் இதில் வழங்கப்பட்டுள்ளதோடு கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.எல்.நிசாமுதீன்அவர்களும் பங்குபற்றி சிறப்பித்தார்.

அதிகமான பெண்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியதோடு எதிர்காலத்திலும் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடுசெய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

ஈற்றில் நன்றியுரை கழக செயலாளர் SM. Arouf Arshath அவர்களால் நிகழ்த்தப்பட்டு ஸலவாத்துடனும்இறைவனின் உதவியுடனும் நிகழ்ச்சி நிறைவுற்றதாக உதவி செயலாளர் சமீல் றசூல் குறிப்பிட்டார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -