கிழக்கு மாகாண சபை ஆட்சி தொடர்பில் எமக்கும் மு.கா வுக்கும் இடையில் ஒப்பந்தம் இல்லை- சம்­பந்தன்

கிழக்கு மாகாண சபை ஆட்சி தொடர்பில் கூட்­ட­மைப்­புக்கும் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்­கு­மி­டையில் எத்தகைய ஒப்­பந்­த­ங்களும் மேற்கொள்ளப்பட வில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆட்சி அமைப்­பது தொடர்பில் கூட்­ட­மைப்­புக்கும் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்­கு­மி­டையில் ஒப்­பந்­த­ம் கைச்சாத்திடப்பட்டுள்ளதா?என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரி­விக்­கையில்;

எவ்­வித ஒப்­பந்­தமும் என்­னுடன் செய்­யப்­ப­ட­வில்லை. நான் அவ்­வா­றா­ன­தொரு ஒப்­பந்த செயல்­மு­றையில் பங்­கு­பற்­ற­வு­மில்லை. இவ்­வொப்­பந்தம் செய்­யப்­பட்­டதா? இல்­லையா? என்­பது பற்றி யான் பேசத்­த­யா­ரா­யில்லை. யாரா­வது அப்­ப­டி­யொரு ஒப்­பந்தம் செய்­தி­ருந்தால் அது விரைவில் வெளி­வரும். இது தொடர்பில் விளக்­க­ம­ளிக்க எதிர்­வரும் சனிக்­கி­ழமை காலை எமது கட்சி உறுப்­பி­னர்கள் ஆத­ர­வா­ளர்கள் சகிதம் ஒன்று கூட­வுள்­ளோ­ம்.

கிழக்கு மாகாண சபையில் ஜனா­தி­பதித் தேர்­தலின் போது இருந்த ஆட்சி ஒழுங்கு பெரும்­பான்மைப் பலத்தை இழந்து மாற்றம் அடைந்து காணப்­பட்­டது. இதன் நிமித்தம் கிழக்கு மாகாண சபையில் ஒரு புதிய ஆட்சி அமைப்­பது சம்­பந்­த­மாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கும் இடையில் பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­றது.

ஆனால் அந்த பேச்­சு­வார்த்தை கட்­சியின் தலை­வர்கள் கொண்ட உயர் மட்ட பேச்சு வார்த்­தை­யாக இருந்தும் கூட ஒரு இணக்­கப்­பாடு ஏற்­ப­ட­வில்லை. காரணம் என்­ன­வென்றால் 2012 ஆம் ஆண்டு தேர்தல் நடை­பெற்ற போது தேர்­த­லுக்கு முன்னும் தேர்­த­லுக்குப் பின்னும் ஒரு கூட்­டாட்சி அமைப்­ப­தற்­காக அதா­வது த.தே. கூட்­ட­மைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஆகிய மூன்று கட்­சி­களும் அன்­றைய அர­சாங்­கத்தை எதிர்த்துப் போட்­டி­யிட்ட மூன்று கட்­சி­களும் கூட்­டாக சேர்ந்தே ஆட்­சி­ய­மைக்க நாங்கள் தயா­ராக இருந்­துங்­கூட முதல் அமைச்சர் பத­வியை அடை­வ­தற்­காக மஹிந்த ராஜ­பக்ஷ அரசு கிழக்கு மாகா­ணத்தில் ஆட்சி அமைத்து விடக்­கூ­டாது என்­ப­தற்­காக நாம் முதல் அமைச்சர் பத­வியை முஸ்லிம் காங்­கி­ர­ஸூக்கு விட்­டுக்­கொ­டுக்கத் தயா­ராக இருந்தோம்.

ஆனால் எமது கோரிக்­கையை நிரா­க­ரித்து விட்டு முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையில் போட்­டி­யிட்டு எந்த அடிப்­ப­டையில் முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களைப் பெற்­றார்­களோ அதற்கு மாறாக மஹிந்த ராஜ­பக்ஷ வின் கூட்­டுடன் போய் இணைந்து கிழக்கின் அதி­கா­ரத்தை கைப்­பற்­றி­னார்கள்.

இது மிகவும் ஓர் தவ­றான செய­லாகும். கிழக்கு மாகாண மக்­க­ளுக்கு மாறாக விஷே­ஷ­மாக முஸ்லிம் மக்­க­ளுக்கு மாறாக இழைக்­கப்­பட்ட மாபெரும் தவறு என்று தான் நான் கரு­தினேன். இது நடை­பெற்­றது முஸ்லிம் மக்­க­ளுக்­காக அல்ல தமிழ் பேசும் மக்­க­ளுக்­காக அல்ல தங்கள் சுய­ந­லத்­துக்­காக.

2015 தற்­பொ­ழுது ஆட்­சியில் மாற்றம் ஏற்­பட்டு புதிய ஆட்சி முறை­மையை கிழக்கில் அமைக்க நாங்கள் முயற்­சித்த போது நாங்கள் முன் வைத்த கோரிக்கை என்­ன­வென்றால் மக்­களின் ஜன­நா­யக தீர்­வின்­படி நாங்கள் முடி­வு­களை எடுக்க வேண்டும். மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சி எங்­களை விட 6150 வாக்­கு­கள்தான் கூடு­த­லாகப் பெற்­றி­ருந்­தார்கள். குழ­று­படி கார­ண­மா­கத்தான் அந்த வாக்­கையும் அவர்கள் பெற்­றி­ருந்­தார்கள். ஆனால் முஸ்லிம் காங்­கிரஸ் 2012ஆம் ஆண்டு தேர்­தலில் 61 ஆயிரம் வாக்­கு­களையே பெற்றிருந்தது.

மாகாண ரீதி­யாக இருக்­கின்ற மூன்று மாவட்­டங்­களில் திரு­ம­லை­யிலும் மட்­டக்­க­ளப்­பிலும் த.தே. கூட்­ட­மைப்பு முத­லி­டத்தையும். முஸ்லிம் காங்­கிரஸ் திரு­மலை மட்­டக்­க­ளப்பு மாவட்­டங்­களில் மூன்றாம் இடத்­திலும் அம்­பா­றை­யிலும் வந்­தி­ருந்­தது. முஸ்லிம் காங்­கிரஸ் எந்­த­வொரு இடத்­திலும் முத­லி­டத்தைப் பெற­வில்லை.

இந்தக் கார­ணத்தின் நிமித்தம் மக்­களின் ஜன­நா­யக தீர்வின் பிர­காரம் முதல் அமைச்சர் பதவி எமக்கு தர வேண்­டு­மென அண்­மையில் கோரி­யி­ருந்தோம். தூர­திஷ்­ட­வ­ச­மாக மக்­களின் ஜன­நா­யக முடிவை ஏற்று நல்­ல­தொரு முடி­வுக்கு வரக் கூடிய பக்­குவம் முஸ்லிம் காங்­கி­ர­ஸிடம் இருக்­க­வில்லை. அவர்கள் யாரை எதிர்த்து ஜனா­தி­பதி தேர்­தலில் வாக்­க­ளித்­தார்­களோ அவர்­க­ளுடன் சேர்ந்து ஒரு பெரும்­பான்­மையை நிரூ­பிக்கக் கூடிய வகையில் ஒன்று கூடி கிழக்கின் முதல் அமைச்சரை சத்­தியப் பிர­மாணம் செய்ய வைத்­தி­ருக்­கின்­றார்கள். முஸ்லிம் காங்­கி­ரஸின் பிர­தித்­த­லைவர் நஸீர் அகமட் சத்­தியப் பிர­மாணம் செய்­துள்ளார்.

இச்­சூழ்­நி­லையில் எமது மாகாண சபை அங்­கத்­த­வர்­களை முஸ்லிம் காங்­கிரஸ் அழைத்­தி­ருந்­தார்கள் தங்­க­ளுடன் பேசும்­படி மாகாண சபை உறுப்­பி­னர்கள் தலைமைப் பீட அனு­மதி பெற்று பேச்­சு­வார்த்­தையில் கலந்து கொள்­வ­தற்கும் அனு­மதி வழங்­கினோம். 

அவ்­வகை பேச்­சு­வார்த்­தைகள் பல நடை­பெற்­றன. அந்த பேச்­சு­வார்த்­தையின் முடி­வுகள் இன்னும் பகி­ரங்­க­மாக வெளி­வ­ர­வில்லை. ஆனால் எமது உறுப்­பி­னர்­களின் எண்­ணங்கள் என்­ன­வென்றால் மாகாண ஆட்சி நல்ல முறையில் நடை­பெற வேண்டும்.

 இன வித்­தி­யா­சங்­க­ளுக்கு அப்பால் முறை­யான ஆட்சி சிறப்­பான ஆட்சி நடை­பெற வேண்டும். அதற்கு தாங்கள் ஒத்­து­ழைக்க வேண்­டு­மென த.தே. கூட்­ட­மைப்பின் மாகாண சபை உறுப்­பி­னர்கள் கரு­து­கி­றார்கள் என நான் அறி­கிறேன்.

அவர்­களின் மேற்­படி கருத்தை நாம் உதா­சீனம் செய்­ய­மாட்டோம். ஆனால் அதே சமயம் கிழக்கு மாகாண மக்கள் அனை­வரும் விசே­ஷ­மாக கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் ஜனநாயக ரீதியில் வழங்கப்பட்ட தீர்வின் அடிப்படையில் எமது கோரிக்கை எமது வேண்டுகோள் நியாயமானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். 

அதற்காக இந்த உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டிய தேவையுள்ளது. இது 2012 ஆம் ஆண்டு நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு மீண்டும் நடைபெற்றிருக்கிறது. தொடர்ந்து நடைபெறுவதற்கு நாம் இடமளிக்க முடியாது. ஆகவே கிழக்கு மாகாணப் பிரச்சினைக்கு எவ்விதமான தீர்வைக் காணலாம் என்பது பற்றி நாங்கள் சிந்திப்போம். ஆராய்வோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -