வட மாகாண முதலமைச்சரும் கிழக்கு மாகாண முதலமைச்சரும் சந்திப்பு!

ட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ர­னும் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹ­மட்டும் விரைவில் சந்­திக்­க­வுள்­ளனர்.

கிழக்கு மாகா­ணத்தின் முத­ல­மைச்­ச­ராக பொறுப்­பெற்­றுள்ள ஹாபீஸ் நஸீர் அஹமட் தமிழ்ப் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளு­ட­னான நேற்­றைய சந்­திப்பில் இதனை உறு­திப்­ப­டுத்­தினார்.
அவர் மேலும் கூறு­கையில்,

தமிழ் முஸ்லிம் மக்­க­ளுக்­கி­டையில் நீண்­ட­கால உறவு காணப்­ப­டு­கின்­றது. அதனை மேலும் வலுப்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும். அத்­துடன் வடக்­கிலும் கிழக்­கிலும் சிறு­பான்மை இனத்தை சேர்ந்­த­வர்­களே முத­ல­மைச்­சர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றனர். 

இரண்டு சமூ­கத்­திற்கும் பல்­வேறு பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. இவை தொடர்பில் ஒற்­று­மைப்­பாட்­டுடன் தீர்வைப் பெற்­றுக்­கொள்­வதே அவ­சி­ய­மா­னது. ஆகவே அவை தொடர்­பா­கவும் நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் வடக்கு முதல்வரை விரைவில் சந்திக்கவுள்ளேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -