சிறைச்­சாலை பாது­கா­வலர் பத­வி­க­ளுக்­கான விண்­ணப்­பங்கள் கோரப்பட்டுள்ளன

எப்.சிஹான் -

லங்கை சிறைச்­சா­லைகள் திணைக்­க­ளத்தின் சிறைச்­சாலை பாது­கா­வலர் பத­வி­க­ளுக்­கான விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டுள்­ளன.

இவ்­வெற்­றி­டங்­களில் தொண்­ணூற்­றைந்து வீதமானவை திறந்த பிரி­விலும் மிகுதி ஐந்து வீதம் சிறைச்­சா­லைகள் திணைக்­க­ளத்தில் சேவை­யி­லி­ருக்கும் விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்­கான எல்லைப் போட்டி பரீட்சை மூலமும் நிரப்­பப்­படும்.

விண்­ணப்­ப­தா­ரிகள் விண்­ணப்பம் ஏற்­றுக்­கொள்ளும் இறுதித் திக­திக்கு 18 வய­துக்கு குறை­யா­த­வ­ரா­கவும் 30 வய­துக்கு மேற்­ப­டா­த­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். மேலும் க.பொ.த (சா/த) தர பரீட்­சையில் சிங்­களம்இ தமிழ் அல்­லது ஆங்­கிலம் மற்றும் கணிதம் உட்­பட பாடங்­களில் விசேட சித்­தி­யுடன் ஆறு பாடங்­களில் இரண்டு அமர்­வு­க­ளுக்கு மேற்­ப­டாத வகையில் சித்­தி­ய­டைந்­தி­ருத்தல் வேண்டும்.

இப்­ப­த­விக்கு விண்­ணப்­பிப்­ப­வர்கள் தமது விண்­ணப்ப படி­வங்­களை எதிர்­வரும் மார்ச் மாதம் 13 ஆம் திக­திக்கு முன்­பாக சிறைச்­சா­லைகள் ஆணை­யாளர் நாயகம் இல 150 பேஸ்லைன் வீதி கொழும்பு 9 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என கேட்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -