ஜே வி பி இரட்டை வேடமணிந்து செயற்படுவதாக, தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. அதன் அரசியல்குழு உறுப்பினர் மத்திய மாகாண சபை உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கும், வழிநடத்தலுக்கும் இசைந்து கொடுக்கின்ற அரசாங்கம் ஒன்றே தற்போது பதவி ஏற்றுள்ளது.
இதற்கு ஜே வி பி ஒத்துழைத்து செயற்படுகிறது.
ஜே வி பி தமது கொள்கைகளுக்காக செயற்படுவதை போல ஒரு வேடத்திலும், இரவில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவளித்து மற்றுமொரு வேடத்தையும் வெளிப்படுத்தி வருகிறது என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
